.

Pages

Tuesday, November 26, 2019

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.26
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை பிரிவு சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

பள்ளித்தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். சிறப்பு விருந்தினராக, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி.ஷெரீன் பேகம் கலந்துகொண்டு, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கவுன்சிலர் ஜெயபாரதி டெங்கு பரவாமல் தடுப்பது குறித்து எடுத்துரைத்தார்.

முகாமில், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை, பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி எம்.அமீர் காசிம் செய்திருந்தார்.

இம்முகாமில், பள்ளி ஆசிரியை ஆஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.