.

Pages

Wednesday, November 27, 2019

அதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீலாது பெருவிழா அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா பள்ளி இமாம் மவ்லவி கே. முகமது முஸ்தபா சிராஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி எம்.அபூதாஹிர் பாக்கவி, 'நம்மை போன்றவர்களா? நபி பெருமான் (ஸல்) அவர்கள்' என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் மவ்லவி. டி.எஸ்.ஏ அபூதாஹிர் ஃபஹீமி, 'மாநபி மவ்லீது மார்க்கத்திற்கு அரணா? முரணா?' என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, 'பிறப்பையும் சரித்திரமாக்கிய பெருமானார் (ஸல்)' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர். நிறைவில், துஆ ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.