.

Pages

Tuesday, November 12, 2019

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள்:பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் நவ.12-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், வீரியங்கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளி சார்பில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் பிரபாகரன் வரவேற்றார். காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தவாறும், 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நடந்தும், விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, சேதுசாலை, முதன்மைச் சாலை, பேருந்து நிலையம் சென்று திரும்பி, ரயிலடியில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து அவற்றை பாதுகாப்புடன் மூட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறு, குழந்தை தவறி விழுந்து மீட்பது குறித்தும், அவற்றை பாதுகாப்புடன் மூடி வைப்பது குறித்த மாதிரி வடிவம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.