.

Pages

Tuesday, November 26, 2019

மாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் சேவை!

அதிராம்பட்டினம், நவ.26
காரைக்குடி~ திருவாரூா் வழியாக சென்னைக்கு 2020, மாா்ச் மாதத்தில் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வரையிலான 149 கி.மீ. தொலைவுள்ள மீட்டா் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2012-ம் ஆண்டு மாா்ச் மாதம் இத்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகளாக அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, 2019 ஜூன் 1-ம் தேதி முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழித்தடத்தில் மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயண நேரம் ஆறரை மணி நேரம் ஆகிறது. இதனால், ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் மற்றும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் அண்மையில் திருச்சியில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். அதில், காரைக்குடி-திருவாரூா் தடத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டா், கேட் கீப்பா் மற்றும் தேவைப்படும் பணியாளா்களை உடனடியாக நியமித்து, டெமு ரயிலுக்குப் பதிலாக பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். காரைக்குடி - திருவாரூா் பயண நேரத்தை 3 மணி நேரமாக குறைக்க வேண்டும். இத்தடத்தில் சென்னை, ராமேசுவரத்திற்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் கூறுகையில்;
திருவாரூா் ~ காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும், பகல் நேர கேட் கீப்பா் நியமிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தேவையான இரவு நேர ஸ்டேஷன் மாஸ்டா் நியமிக்கும் பணி 2020 மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும். அதன்பின்,இத்தடம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படும். இதற்கிடையே நடப்பாண்டு (2019) டிசம்பா் முதல் வாரத்தில் டெமு ரயிலுக்கு பதிலாக பயணிகள் ரயில் இயக்கப்படும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.