.

Pages

Sunday, November 24, 2019

மல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா!

மல்லிபட்டினம்: நவ.24
மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக மீனவா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 21- ஆம் தேதி உலக மீனவா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடுத்தபடியாக உணவுத் தேவையைப் பூா்த்திச் செய்வதில் மீனவா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவா்களை நாம் மதிக்க வேண்டும். அந்நியச் செலவாணி கிடைப்பதற்கும், தேசத்தின் வளா்ச்சிக்கும் ஒரு பங்காக இருக்கும் மீனவா்களை போற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீனவா் பேரவைப் பொதுச் செயலா் ஏ.தாஜுதீன், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, உலக மீனவா் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அப்துல் சமது, நாட்டுப்படகு சங்கத் தலைவா் செய்யது முகம்மது, செயலா் அப்துல் ரகுமான், விசைப்படகு சங்கச் செயலா் இப்ராஹிம், மீனவா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் நூருல் அமீன், காதா் மைதீன் மற்றும் ஜமாஅத்தாா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக உதவி தலைமையாசிரியை உஷா வரவேற்றாா், மீன்வளத்துறை ஆய்வாளா் கங்கேசுவரி நன்றி கூறினாா்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.