![]() |
கோப்புப்படம் |
அதிரை பைத்துல்மால் சேவையகம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு பொதுநல சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக, வட்டியில்லா நகைக் கடன் வழங்குதல், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பென்ஷன் உதவி, ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி, வறிய மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிரை பைத்துல்மால் சேவை திட்டத்தின் வரிசையில், பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி அதிரை பைதுல்மால் அலுவலக மாடியில் கடந்த 09-03-2016 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சியை பெண் பயிற்சியாளர் வழங்கி வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெற்று வருகிறது. முதல் ஒரு மணி நேரத்திற்கு மெஷின் பயிற்சியும், பின்னர், இதர பயிற்சியும் வழங்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அள்ளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தகுதித் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. எவ்வித லாப நோக்கமின்றி செயல்படும் இப்பயிற்சியில், ஓய்வில் இருக்கும் குடும்பப் பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பயனடைந்து வருகின்றனர். இதுவரையில், மொத்தம் 156 பேர் தையல் பயிற்சி பெற்று தகுதிச்சான்றிதழ் பெற்றுள்ளனர்.
தற்போது தையல் பயிற்சிக்கான புதிய சேர்க்கை நடைபெற்று வருகிறது. தையல் பயிற்சியில் ஆர்வமுள்ள ஓய்வில் இருக்கும் குடும்பப் பெண்கள், தொழில் முனைவோராக விரும்பும் பட்டதாரி மாணவிகள், பள்ளி - கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பயிற்சி பெறலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
04373 241690
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.