.

Pages

Saturday, November 9, 2019

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவு தொடக்கம் (படங்கள்)

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவுகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்  ஆகியோர் இன்று (09.11.2019) திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அதி நவீன கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் துறை, அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு மற்றும் கதிர்வீச்சு துறை சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றில் இன்றைய தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். சர்வதேச தரத்துடன் கூடிய விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அதி நவீன கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் துறை, அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு மற்றும் கதிர்வீச்சு துறை சிகிச்சை பிரிவுகளை ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாது, தஞ்சாவூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து மாவட்ட பொதுமக்களும் மிகவும் பயன் பெறுவர். பொதுமக்களுக்கு உயர்தர மற்றும் நவீன சிகிச்சை வழங்கப்படும். நவம்பர் மாத இறுதிக்குள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2345 செவிலியர்கள், 1234 கிராம சுகாதார செவிலியர்கள், 90 பிசியோதெரபிஸ்ட் மற்றும் கூடுதல் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஏழை மற்றும் எளிய மக்கள் உயர்ந்த சிகிச்சை பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் மூலம் நவீன சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.