அதிராம்பட்டினம், நவ.11
அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியில் கோபு என்பவருக்குச் சொந்தமான வீடுகளில் மோகன் (55), மரியா (70), பாப்பாத்தி (75) ஆகிய மூவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோகன் வீட்டுக் கூரையில் திடீரென தீப்பிடித்தது. இதைத் தொடா்ந்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் 3 வீடுகளில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தீ காயமடைந்த மோகன் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் சாா்பில், அதன் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமையில், மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தார் பாய், பெட்சீட், வாளி, கைலி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ரோட்டரி சங்கச்செயலாளர் எஸ். சாகுல்ஹமீது, ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர்கள் கே.வைரவன், எம்.நடராஜன், ரோட்டரி சங்க முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர், சங்க உறுப்பினர் ஏ.ரியாஸ் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியில் கோபு என்பவருக்குச் சொந்தமான வீடுகளில் மோகன் (55), மரியா (70), பாப்பாத்தி (75) ஆகிய மூவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோகன் வீட்டுக் கூரையில் திடீரென தீப்பிடித்தது. இதைத் தொடா்ந்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் 3 வீடுகளில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தீ காயமடைந்த மோகன் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் சாா்பில், அதன் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமையில், மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தார் பாய், பெட்சீட், வாளி, கைலி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ரோட்டரி சங்கச்செயலாளர் எஸ். சாகுல்ஹமீது, ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர்கள் கே.வைரவன், எம்.நடராஜன், ரோட்டரி சங்க முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர், சங்க உறுப்பினர் ஏ.ரியாஸ் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.