இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கூட்டம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலர் வழக்குரைஞர் ஏ.முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவது எனவும், இதில், வெற்றி வாய்ப்புள்ள 6, 7, 8, 10, 11 ஆகிய 5 வார்டுகள் குறித்து கட்சியின் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோழமைக் கட்சி திமுக அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகளிடம் கடிதம் மூலம் விருப்பத்தை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றார். நிறைவில், அக்கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.ஏ. அபுல்ஹசன் ஹாஜியார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், எம்.கே.எம் அபு பக்கர், எம்.ஆர் ஜமால் முகமது, மு.காதர் முகைதீன், இக்பால், ஏ. முகமது முகைதீன், செய்யது முகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.