.

Pages

Wednesday, November 20, 2019

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவாறு வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக திருந்திய கால அட்டவணை வெளியீடு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தற்போது வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, வாக்காளர்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், புகைப்படம், முகவரி, உறவுமுறை ஆகியவை தவறு ஏதுமின்றி, வாக்காளர் பட்டியலில் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை 1950 என்ற வாக்காளர் உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது ஸ்மார்ட் கைப்பேசியின் மொபைல் செயலி (Voters Helpline Mobile App)  மூலமாகவும், www.nvsp.in என்ற இணையதளம் வழியாகவும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்ட அலுவலகங்களில் செயல்படும் பொது சேவை மையம் மு்லமாகவும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் சரிபார்ப்பு பணியினை, தேர்தல் ஆணையம் வருகிற 30-11-2019 வரை நீட்டிப்பு செய்துள்ளது.  வாக்காளர்கள் தங்கள் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2020 பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஆகியவை கீழ்க்குறிப்பிட்டவாறு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

(1) வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் (Electors' Verification Programme)  வருகிற 30-11-2019 வரை மேற்கொள்ளலாம்.  எனவே, சரிபார்ப்பு செய்யாமல் உள்ள வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

(2)  வரைவு வாக்காளர் பட்டியல் 16-12-2019 அன்று வெளியிடப்படவுள்ளது.

(3)  தகுதியுடைய வாக்காளரிடமிருந்து கேட்புரிமம் மற்றும் ஆட்சேபனைகள் )(Claims and Objections) குறித்த விண்ணப்பங்கள் (படிவம் எண் 6,7,8,8ஏ ஆகியன மு்லம் பெறப்படும்; காலம் 16-12-2019 முதல் 15-01-2020 வரை நடைபெறும்.

(4 ) பெறப்படும் விண்ணப்பங்கள் (Claims and Objections) மீது உhpய நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்யும் (Disposal) இறுதி நாள்  27-1-2020  ஆகும்.

(5)  துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி முடிவுறும் நாள்  04-02-2020

(6)  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நாள்  07-02-2020  ஆகும்.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்பின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சரிபார்ப்பு பணி மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2020 தொடர்பான பணிகளை செம்மையாக உரிய காலக் கெடுவிற்குள் மேற்கொண்டு முடித்திடுமாறு தொடர்புடைய தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதன்படி. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணி மற்றும் மேற்குறிப்பிட்ட பணி தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள தங்கள் இல்லம் தேடி வரும்போது, அவர்களுக்கு வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறும், மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் அப்பழுக்கற்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வெளியிட  உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறும் பொது மக்களை அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.