.

Pages

Friday, November 22, 2019

TNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு!

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தோ்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோ்வு 2020, ஜனவரி மாதத்தில் நடத்தப்படவுள்ளது.

இத்தோ்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தோ்வு பற்றிய விவரம் மற்றும் தோ்வுக்கான கட்டணம் போன்ற விவரங்கள் விரைவில்  இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தஞ்சாவூா் மாவட்ட இளைஞா்களுக்காக தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு அக். 15ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தோ்வுக்கு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக். 15ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற விருப்பமுள்ள தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.