அதிரை நியூஸ்: நவ.18
திருச்சி பீமா நகரை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் அப்துல் மஜீத் பதுருதீன். இவரது மகள் ஃபாத்திமா (வயது 13) சவுதி அரேபியா ஜூபைலில் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவரான இவர், தமிழகத்தில் பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சவுதி ஜூபைல் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் (நவ.17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் அவூசாப் சயீது (Ausaf Sayeed) கலந்துகொண்டு மாணவி ஃபாத்திமாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி விடுமுறையில் இந்தியா திரும்பும் மாணவி ஃபாத்திமா துப்பாக்கி சுடும் வீரர் அதிரை வஜீர் அலி வழிகாட்டுதலின் பேரில், கடந்த ஜூலை மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப்பில் நடைபெற்ற INTER DISTRICT OPEN MATCH AIR RIFLE / PISTOL 2019 போட்டியில் 10 M, AIR PISTOL SUB JUNIOR NR & ISSF ஆகிய பிரிவுகளில் பங்குபெற்று மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். மேலும், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பில் நடைபெற்ற 45-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 M, AIR PISTOL பிரிவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி பீமா நகரை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் அப்துல் மஜீத் பதுருதீன். இவரது மகள் ஃபாத்திமா (வயது 13) சவுதி அரேபியா ஜூபைலில் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவரான இவர், தமிழகத்தில் பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சவுதி ஜூபைல் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் (நவ.17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் அவூசாப் சயீது (Ausaf Sayeed) கலந்துகொண்டு மாணவி ஃபாத்திமாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி விடுமுறையில் இந்தியா திரும்பும் மாணவி ஃபாத்திமா துப்பாக்கி சுடும் வீரர் அதிரை வஜீர் அலி வழிகாட்டுதலின் பேரில், கடந்த ஜூலை மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப்பில் நடைபெற்ற INTER DISTRICT OPEN MATCH AIR RIFLE / PISTOL 2019 போட்டியில் 10 M, AIR PISTOL SUB JUNIOR NR & ISSF ஆகிய பிரிவுகளில் பங்குபெற்று மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். மேலும், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பில் நடைபெற்ற 45-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 M, AIR PISTOL பிரிவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.