.

Pages

Saturday, November 30, 2019

பேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்டு!

பேராவூரணி, நவ.30-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருடிச் சென்றவர்களை காவல்துறை தேடி வருகிறது.

பேராவூரணி சேதுசாலையில் பழைய பேருந்து நிலையம் எதிரில் செல்போன் கடை நடத்தி வருபவர் சேக் அப்துல்லா (31), இவரது கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் பன்னீர்செல்வம் (43) வெள்ளிக்கிழமை இரவு இருவரும் வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டு சென்றனர்.

சனிக்கிழமை காலை கடை திறக்க வந்த இருவரும் கடையில் ஓடு பிரிக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெட்டிக்கடையில் இருந்த சிகரெட் பண்டல், சோப் மற்றும் மிட்டாய் உள்ளிட்ட ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும், செல்போன் கடையில் இருந்த மடிக்கணினி மற்றும் 6 செல்போன் உள்ளிட்ட சுமார் ரூ 35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயிருந்தன.

இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தெரு மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். செல்போன் மற்றும் பெட்டிக்கடையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அறிந்த நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தனர். புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.