![]() |
பள்ளி முன்னாள் மாணவரும், காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் ஏ.சேக் அப்துல் காதர் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ.அபுல் ஹசன் அவர்களிடம் வழங்கினார். |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால் தொடங்கி வைத்து பேசினார். காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார்.
காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், கல்லூரி முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் ஏ.முகமது அப்துல் காதர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது, முன்னாள் மாணவர்கள் கமாலுதீன், ஏ.இப்ராஹீம் அன்சாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கடந்த 70 ஆண்டுகளில் பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பள்ளிக் காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை, பள்ளி ஆசிரியர் மு.உமர் பாருக் தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்மலிங்கம், முகமது ஹனீபா, சீனிவாசன், உலக நாதன், மேகலா, சாகுல் ஹமீது, ராமச்சந்திரன், அன்பழகன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பள்ளி ஆட்சிமன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.