.

Pages

Wednesday, November 13, 2019

அதிராம்பட்டினத்தில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம்!

அதிராம்பட்டினம், நவ.13
அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்தது. அதன்பிறகு, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக பன்றிகள் நடமாட்டம் படிப்படியாக குறைந்து முற்றிலும் ஒழிந்தது.

இந்நிலையில், தற்போது கடந்த சில நாள்களாக பன்றிகள் நடமாட்டம் காணப்படுகின்றன. அதிராம்பட்டினம் ரயில் நிலையம், பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீர் ஆகிய இடங்களில் பன்றிகள் காணப்படுகின்றன. இதனால், தொற்று நோய் பரவும் சூழலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

எனவே, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.