.

Pages

Thursday, November 7, 2019

பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (07.11.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, விடுப்பு பதிவேடு, பணிப்பதிவேடு, தன்பதிவேடு மற்றும் இதர அலுவலக பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் பதிவேடு மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான சான்றிதழ் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

இவ்வாய்வின் போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவக காசநோய் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காசநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.