அதிராம்பட்டினம், நவ.28
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் ஊராட்சியை சேர்ந்த கீழத்தோட்டம் கிராமம் .இந்த கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன .இங்கு 200 நாட்டுப் படகுகள் உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்னி ஆற்றில் இருந்து வரும் காட்டாற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் கடலில் இருந்து வெளியான மணல்திட்டு கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலும், 500 மீட்டர் நீளத்திலும் 200 மீட்டர் அகலத்திலும் மூடப்பட்டதால் கீழத்தோட்டம் துறைமுக வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
இந்த மணல் திட்டுகள் அடைக்கப்பட்டுள்ளதால் காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்க முடியாமல் காட்டாற்று நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உட்புகுந்து தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த காட்டாற்று நீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக வைத்திருக்கும் கீழத்தோட்டம் கிராம மக்கள் இந்த மணல் திட்டுகளால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி தற்போது தவித்து வருகின்றனர்.
இதுபற்றி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் கூறுகையில்;
எங்கள் பகுதியில் கடலில் இருந்து மணல் திட்டுகள் அதிக அளவில் வெளிவந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 500 மீட்டர் நீளத்தில் உள்ளது. இதனால் அக்னி காட்டாற்று வெள்ளம் கடலில் உட்புகும் முகத்துவாரத்தை அடைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் எங்கள் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்த முகதுவரம் அடைக்கப்பட்டதால் எங்களால் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் தற்போது நாங்கள் வேலை இழப்பு ஏற்பட்டு மிக வறுமையில் உள்ளோம். எங்களின் நிலை கருதி உடனடியாக துறைமுக வாய்க்காலை தூர் வாரவும் , இந்த மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் ஊராட்சியை சேர்ந்த கீழத்தோட்டம் கிராமம் .இந்த கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன .இங்கு 200 நாட்டுப் படகுகள் உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்னி ஆற்றில் இருந்து வரும் காட்டாற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் கடலில் இருந்து வெளியான மணல்திட்டு கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலும், 500 மீட்டர் நீளத்திலும் 200 மீட்டர் அகலத்திலும் மூடப்பட்டதால் கீழத்தோட்டம் துறைமுக வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
இந்த மணல் திட்டுகள் அடைக்கப்பட்டுள்ளதால் காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்க முடியாமல் காட்டாற்று நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உட்புகுந்து தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த காட்டாற்று நீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக வைத்திருக்கும் கீழத்தோட்டம் கிராம மக்கள் இந்த மணல் திட்டுகளால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி தற்போது தவித்து வருகின்றனர்.
இதுபற்றி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் கூறுகையில்;
எங்கள் பகுதியில் கடலில் இருந்து மணல் திட்டுகள் அதிக அளவில் வெளிவந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 500 மீட்டர் நீளத்தில் உள்ளது. இதனால் அக்னி காட்டாற்று வெள்ளம் கடலில் உட்புகும் முகத்துவாரத்தை அடைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் எங்கள் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்த முகதுவரம் அடைக்கப்பட்டதால் எங்களால் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் தற்போது நாங்கள் வேலை இழப்பு ஏற்பட்டு மிக வறுமையில் உள்ளோம். எங்களின் நிலை கருதி உடனடியாக துறைமுக வாய்க்காலை தூர் வாரவும் , இந்த மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.