.

Pages

Wednesday, November 20, 2019

அதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், நவ.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோபு. இதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீடுகளில் மரியா (வயது 70), பாப்பாத்தி (வயது 75), மோகன் (வயது 55) ஆகிய மூவரும் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு மோகன் என்பர் வீட்டில் திடீரென தீ பற்றியது. பின்னர், அருகில் இருந்த வீடுகளிலும், தீ மளமளவென பரவியது. இதனால், வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்த மோகன் என்பவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நண்பர்கள் சார்பில், தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு, ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான அரிசி ஒரு மூடை, புடவை, கைலி, சட்டை, பெட் சீட், குடம், பக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்.

மேலும், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மோகனை சந்தித்து ஆறுதல் கூறினர். இதில், அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும பொறுப்பாளர்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அரபாத், நாகூர் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீர் அஹமத், அப்துல் சமது, குலாப்ஜாமூன் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.