அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுமனைத்தெரு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் 01-06-2020 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் இணைச்செயலாளர் என். அபூ தாஹிர் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி பில்டர்ஸ் அசோசியேஷன் நிறுவனத்தலைவர் பொறியாளர் பி. செல்வகுமார் கலந்துகொண்டு, அமைப்பின் செயல்பாடுகள், துணைவிதிகள், தொழிலாளர்கள் நலன், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை தொடர்பாக விளக்கிப்பேசினார்.
முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் தங்களைப்பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டனர். நிறைவில், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹலீமுதீன் நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுமனைத்தெரு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் 01-06-2020 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் இணைச்செயலாளர் என். அபூ தாஹிர் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி பில்டர்ஸ் அசோசியேஷன் நிறுவனத்தலைவர் பொறியாளர் பி. செல்வகுமார் கலந்துகொண்டு, அமைப்பின் செயல்பாடுகள், துணைவிதிகள், தொழிலாளர்கள் நலன், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை தொடர்பாக விளக்கிப்பேசினார்.
முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் தங்களைப்பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டனர். நிறைவில், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹலீமுதீன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.