அதிராம்பட்டினம், ஜூன் 04
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, நமது பள்ளி!, நமது குழந்தை!!, நமது குடும்பம்!!! என்கிற திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி ஆய்வாளர் மாதவன் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.36 ஆயிரம் மதிப்பில், 70 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, காய்கறி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது, உறுப்பினர்கள் ஏ.கே சாகுல் ஹமீது, ஹாஜா பகுருதீன் மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, நமது பள்ளி!, நமது குழந்தை!!, நமது குடும்பம்!!! என்கிற திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி ஆய்வாளர் மாதவன் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.36 ஆயிரம் மதிப்பில், 70 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, காய்கறி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நெய்னா முகமது, உறுப்பினர்கள் ஏ.கே சாகுல் ஹமீது, ஹாஜா பகுருதீன் மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.