.

Pages

Monday, June 1, 2020

பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் போக்குவரத்து தொடக்கம்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 01
பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (01.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட பொது போக்குவரத்து இன்று (01.06.2020) தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயில் நிலையம், கரந்தை தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (01.06.2020) முதல் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் உட்பட ஏழு மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல அனைத்து வகையான போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவருக்கும் உடற்வெப்ப பரிசோதனை செய்தல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் நிலையங்களில் கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கீழவாசல் டபீர்குளத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்திடவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் அறிவுறுத்தினார்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, டபீர்குளம் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ரவீந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.