.

Pages

Wednesday, January 1, 2014

உடல் நிலை பாதிக்கபட்ட பிலால்நகர் சகோதரருக்கு லண்டன் வாழ் அதிரையர் வழங்கிய ரூ 10,000/- த்தை த.மு.மு.க நிர்வாகிகள் ஒப்படைத்தனர் !

அதிரை பிலால் நகரை சேர்ந்தவர் ஹாஜா. இவர் பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் சில செயலிழந்து படுத்த படுக்கையாய் காணப்பட்டார். ஏழ்மை நிலையில் இருக்கும் இவருக்கு போதிய பொருளாதார வசதியின்மையால் தொடர்ந்து இவரால் சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை.

இவரின் நிலை குறித்து அதிரை நியூஸ் தளத்தில் கடந்த [ 12-12-2013 ] அன்று 'உயிருக்கு போராடும் பிலால் நகர் சகோதரனுக்கு உதவிடுவீர் !' என்ற தலைப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களிடம் உதவி கோரப்பட்டது. இதில் இவருடைய குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள ஹாஜா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது அன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அதிரை நியூஸ் சார்பாக அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டுகோள் விடப்பட்டதின் அடிப்படையில் அவற்றை பதிவிட்டும் இருந்தனர். இவற்றை பார்வையிட்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் ஹாஜா அவர்களுக்கு உதவும் விதமாக நேரடியாகவும், வங்கி கணக்கின் வழியாகவும் முன்வந்தனர்.

இதில் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்றி செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 10,000/- த்தை த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகள் முன்னிலையில் இன்று மாலை வழங்கப்பட்டது. உதவியை பெற்றுக்கொண்ட ஹாஜா குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தனர்.

குறிப்பு : இதுவரையில் ஹாஜா குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் சகோ. ஹாஜா அவர்களின் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் அவனின் அருள் என்றும் உண்டு.

    ReplyDelete
  3. நல் உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்சுவனத்தில் ஈர்கப்படுவான் ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.