அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம் ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.
இதனை மிஞ்சும் அளவுக்கு, ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000 வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் திரண்டனர்.
அதன் புகைப்படங்கள் இதோ...
Arumaiyana thakaval
ReplyDeleteஉலகில் பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை கணகிட்ட மனிதன் முதலில் மாதங்களை மட்டுமே காலங்களுக்கு வரிசை படுத்தினான் அப்படிஎன்றால் 'மனிதர்களால் உண்டாக்கபட்ட காலங்களில் பிறக்கும்ஒவ்வொருவினாடிகளும் புதியனவே'. பனிரெண்டு மாதங்கள் மட்டுமே இருந்து வந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளை வைத்து அதிலிருந்து அவர் அவர்கள் மத அடிப்படையில் அவைகளை ஆண்டுகளாக குறிப்பிடுகின்றனர். கிருஸ்தவ ஆதிகத்தின் கை உலகில் ஓங்கியதால் இதை மாற்று மதத்தவரும் பின்பற்றும் நிர்பந்தம். மேலும் ஒரு வேதைக்குரிய விஷயம் இஸ்லாமிய அமீரகம் இதை கொண்டாடி இதன் வான வேடிக்கையில் இவர்கள் உலக சாதனை படைக்க உள்ளனர் என்பதே .
ReplyDeleteஇஸ்லாமிய சட்டத்தை நன்கு தெரிந்த அரபு மக்களும்,அரசுகளும் அமெரிக்காவையும்,ஐரோப்பாவையும் சந்தோசப் படுத்துவதற்கு பல கோடிக் கணக்கான ரூபா செலவு செய்கிறார்கள்,அந்தோ பரிதாபம் இவர்கள் மஹ்சரில் என்ன பதில் சொல்ல போகிறார்களோ.!
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.