.

Pages

Thursday, January 2, 2014

காண்ட்ராக்டர் வீரையனின் கடின உழைப்பில் மிளிரும் செய்னாங்குளம் !? [ புகைப்படங்கள் ]

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செயல்படுத்திவரும் காண்ட்ராக்டர் திரு. வீரையன் அவர்கள் கடந்த சில மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகளில் களத்தில் நின்று மும்முரமாக பணியாற்றி வந்தார். இவரின் கடின உழைப்பின் கீழ் குளத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்புவிழா காணப்படவுள்ளது.

நமது அதிரை நியூஸ் உள்ளூர் வாசகர் ஜஹபர் சாதிக் அவர்கள் மிளிரும் செய்னாங் குளத்தை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நமக்கு அனுப்பி வைத்தார். அழகாக காட்சியளிக்கும் குளத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...











5 comments:

  1. புகை படம் 4 தடுப்பு சுவரில் விரிசல் ஏற் பட்டுள்ளது உடன் சறிபன்ன சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. காண்ட்ராக்டர் திரு. வீரையன் அவர்களிடம் விசாரித்த வகையில்...
      தவறுதலாக ஜேசிபி இயந்திரம் அதன் மீது ஏறியதால் விரிசல் ஏற்பட்டு விட்டது என்றும் உடன் சரிசெய்யப்படும் என்று கூறினார்

      Delete
  2. ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த பணிகள் நிறைவுற்றதா???????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. புனரமைக்கும் பணிகளில் பெரும்பாலானவை முடிவுற்று இன்னும் சில பணிகள் இருக்கிறது. குறிப்பாக செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீரை குழாய் மூலம் கொண்டுவருவது, குளத்தை சுற்றி நடைபாதை அமைப்பது உள்ளிட்டவை.

      Delete

  3. மிக்க மகிழ்ச்சி ! ஆனால் திரு . வீரையன் அவர்களை பற்றி இவ்வளவு புகழாரம் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை .(" கடின உலப்பில் மிளிர்கிறது ") ஏனென்றல் அவர் ஒரு கான்றக்டோர், இந்த வேலைக்காக ரூபாய் 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கார் . ஆகவே எந்த ஒரு கான்றாக்டோரும் இதை தான் செய்துருப்பர் , தயவு செய்து மேலே நண்பர் மான் சீக் கூறியது போலே 50 லட்சத்துக்கு ஆனா வேலைகள் முடிந்து விட்டதா என்பதை சரி செய்யூம் படி மிக தால்மையூடன் கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.