.

Pages

Monday, March 17, 2014

காதிர் முகைதீன் கல்லூரியின் 59 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 17-03-2014 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் 59 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

MKN ட்ரஸ்டின் நிர்வாகி நீதிபதி K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்த, கல்லூரி நிகழ்த்திய சாதனைகளை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் A. ராம் கணேஷ் சிறப்புரையை வழங்க, கல்லூரியின் நிறுவனர் உரையை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முதல்வர் முனைவர் A.M. முஹம்மது சிந்தாஷா நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் முகமது முகைதீன் நன்றி கூறினார்.

இவ்விழாவில் பல்கலைக்கழக அளவில் தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும், மற்றும் பேச்சு, பொது அறிவு, கட்டுரை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.