ஜித்தா அய்டாவின் மாதாந்திரக் கூட்டம் வழக்கம்போல் கடந்த 14.03.2014 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அதிரை சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் சிறப்பு அம்சமாக தாயகத்திலிருந்து சவூதி வருகை தந்திருக்கும் சமூக ஆர்வலரும், நாடெங்கும் பைத்துல்மால்களை நிறுவி வருபவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சகோ.எஸ்.எம். ஹிதாய்த்துல்லாஹ் அவர்களுக்கு அய்டாவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பைத்துல்மாலின் அவசியம் குறித்தும் அதன் வளர்ச்சியில் பொதுமக்களிம் பங்கு குறித்து ஹாஜி. எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் மிகச் சிறந்த விழிப்புணர்வு சிரப்புரை ஆற்றினார்.
மேலும் காயல்பட்டினம், கீழக்கரை இன்னும் பல ஊர்களின் சங்க நிர்வாகிகளுக்கும், தமுமுக, ததஜ, எஸ்டிபிஐ, தஃபாரெஜ், டிஎம் எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அய்டாவின் சார்பில் அழைப்பு விடுத்து பைத்துல்மால் நிறுவப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இறுதியில் இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தகவல் : ஜஃபருல்லா - ஜித்தா
புகைப்படம் : அப்துல் அஜீஸ் [ RABEA TEA ]
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.