திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர். அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில் அவர் வேதாரன்யம் தாலுக்கா, தென்னடார் நடுக்காடு, கிராமத்தை சேர்ந்த செவந்தான் மகன் சுப்பிரமணியன்(43) என்று தெரிந்தது. சுப்பிரமணியன் ஆலங்காடு பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துக்க வீட்டிற்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது அடயாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்று விட்டார்களா ? என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.
படம் செய்தி:
1. முத்தப்பேட்டை அடுத்த ஆலங்காடு சாலை ஓர வாய்க்காலில் கிடந்த சுப்பிரமணியன் உடலை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
2. சுப்பிரமணியன் உடல்.
நன்றி : நிருபர் மு. முகைதீன் பிச்சை, முத்துப்பேட்டை
படம் செய்தி:
1. முத்தப்பேட்டை அடுத்த ஆலங்காடு சாலை ஓர வாய்க்காலில் கிடந்த சுப்பிரமணியன் உடலை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
2. சுப்பிரமணியன் உடல்.
நன்றி : நிருபர் மு. முகைதீன் பிச்சை, முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.