.

Pages

Sunday, March 9, 2014

முத்துப்பேட்டையில் திடீர் சாலைமறியல் !

அரசு சார்பில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து கண்டித்து முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 250 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

முத்துப்பேட்டை பகுதிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, கணவ னால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொ கையை மாதந்தோறும் வழங்காமல் 3 மாதம், 4 மாதம் என அதிகாரிகள் தாமதம் செய்வதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர செயலாளர் காளிமுத்து தலைமையில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மறியலில் 250 பேர் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார், 250 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். அங்கு திருத்துறைப்பூண்டி தனி தாசில்தார் கலைஷ்வரன், விஏஒ கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி தெரிவித்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

செய்தி : தினகரன்

2 comments:

  1. இவர்கள் தினமும் போராட்டம் நடத்துவார்கள் ஆனால் எதுவும் நடக்காது, இப்படி ஒரு கட்சி இருப்பதை நினைவு படுத்துகிறார்கள் போலும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.