.

Pages

Friday, March 28, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் !

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் [ அல் அமீன் பள்ளி அருகே ] புதியதோர் உதயமாக 'ஹாட் விங்ஸ்' துரித உணவகம் இன்று [ 28-03-2014 ] மாலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டு உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் அன்புடன் வரவேற்றார்.

தொழில்குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் சதாத் நம்மிடம் கூறுகையில்...
'நவீன வசதிகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உடனுக்குடன் சுவையுடன் கூடிய உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்வது போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளோம். மேலும் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் போன்லெஸ், புரோஸ்டட் சிக்கன், சிக்கன் பாப்கார்ன், சிக்கன் லாலி பாப், சிக்கன் நக்கெட்ஸ், பிரெஞ்ச் ஃப்ரை ஆகியன இங்கே தயார் செய்யப்படுகிறது. புதினா, ஆரஞ்சு, மேங்கோ, பைனாப்பிள், புருட் பியர்,கோலா, லெமன், மசாலா சோடா போன்ற வெரைட்டிகளில் குளிர்பான வகைகளும் உண்டு' என்றார்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.