.

Pages

Wednesday, March 5, 2014

பட்டுக்கோட்டையில் UAPA சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது [ படங்கள் இணைப்பு ] !

UAPA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் இன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A. ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு UAPA சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் போது UAPA சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினர். போலீசார் தடுத்து நிறுத்தி தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் PFI, SDPI, கேம்பஸ் ஃபிராண்ட் ஆப் இந்தியா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விவசாய விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கலந்துகொண்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.









1 comment:

  1. தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.