இதே கட்டிடத்தில் மளிகை கடையை ஜமால் முஹம்மது என்பவரும், உணவகத்தை தமீம் என்பவரும், டைலர் கடையை செல்வம் என்பவரும் நடத்தி வந்தனர். இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டதில் அனைத்து கடைகளும் எரிந்து நாசமாகின.
தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள வீடுகளிலிருந்தும், ஹனிப் பள்ளியிலிருந்தும் எடுத்து வரப்பட்ட தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். மேலும் பரவ இருந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதினால் ஏற்பட இருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து ஹனிப் பள்ளி நிர்வாகத்தினரும், கடைகளின் உரிமையாளர்களும் காவல்துறையில் புகார் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். நள்ளிரவில் ஏறபட்ட இந்த திடீர் தீ விபத்தால் இந்தபகுதி முழுதும் பரப்பரபாக காணப்பட்டது.
அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் கிளை அமைத்து தர வேண்டி நமதூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்று தக்வா பள்ளி மீன் மார்க்கெட் தீபிடித்து எரிந்தது, அன்றே முன் எச்சரிக்கையாக நடவடிக்கையாக தீயணைப்பு நிலையம் அமைத்திருக்கலாம். நமதூர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் நமதூர் CMP லைனில் தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் எரிந்து நாசமாகிவிட்டது. நாளை தீ விபத்து பெரிய அளவில் நடக்குமா? அல்லது சிறிய அளவில் நடக்குமா? யார் கண்டா. அரசு அதிகாரிகளே எங்கள் உயிருடனும், பொருளாதாரத்துடனும், விளையாடாதிர்கள். நமதூரில் என்னற்ற இயக்கங்களும், மீடியாக்களும், இருந்தும் நமதுருக்கு தீயணைப்பு நிலையம் கொண்டுவர முடியவில்லை. சகோதர்களே! உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, நமதுருக்கு தீயணைப்பு நிலையம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்.
ReplyDelete