.

Pages

Wednesday, March 5, 2014

சிஎம்பி லைனில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் எரிந்து நாசம் [ படங்கள் இணைப்பு ] !

அதிரை சிஎம்பி லைன் பகுதியில் அமைந்துள்ள ஹனிப் பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடைகள் இயங்கி வந்தன. இதில் அரசு ரேஷன் கடையும் இயங்கி வந்தது. 1200 குடும்ப அட்டைகளை கொண்டுள்ள இந்த கடையில் இப்பகுதி மற்றும் இப்பகுதியை சுற்றி வசிக்ககூடியவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்வார்கள். எந்நேரமும் கூட்டமாக காணப்படும் இந்த கடை போதிய இட வசதி இல்லை என்றாலும் கடையின் எதிரே உள்ள சிஎம்பி வாய்க்காலை ஒட்டிய சாலையோரத்தில் பொருட்களை வைத்து விநியோகம் செய்யப்படும். இதனால் வாகன நெருக்கடியும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

இதே கட்டிடத்தில் மளிகை கடையை ஜமால் முஹம்மது என்பவரும், உணவகத்தை தமீம் என்பவரும், டைலர் கடையை செல்வம் என்பவரும் நடத்தி வந்தனர். இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டதில் அனைத்து கடைகளும் எரிந்து நாசமாகின.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள வீடுகளிலிருந்தும், ஹனிப் பள்ளியிலிருந்தும் எடுத்து வரப்பட்ட தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். மேலும் பரவ இருந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதினால் ஏற்பட இருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து ஹனிப் பள்ளி நிர்வாகத்தினரும், கடைகளின் உரிமையாளர்களும் காவல்துறையில் புகார் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். நள்ளிரவில் ஏறபட்ட இந்த திடீர் தீ விபத்தால் இந்தபகுதி முழுதும் பரப்பரபாக காணப்பட்டது.





1 comment:

  1. அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் கிளை அமைத்து தர வேண்டி நமதூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்று தக்வா பள்ளி மீன் மார்க்கெட் தீபிடித்து எரிந்தது, அன்றே முன் எச்சரிக்கையாக நடவடிக்கையாக தீயணைப்பு நிலையம் அமைத்திருக்கலாம். நமதூர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் நமதூர் CMP லைனில் தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் எரிந்து நாசமாகிவிட்டது. நாளை தீ விபத்து பெரிய அளவில் நடக்குமா? அல்லது சிறிய அளவில் நடக்குமா? யார் கண்டா. அரசு அதிகாரிகளே எங்கள் உயிருடனும், பொருளாதாரத்துடனும், விளையாடாதிர்கள். நமதூரில் என்னற்ற இயக்கங்களும், மீடியாக்களும், இருந்தும் நமதுருக்கு தீயணைப்பு நிலையம் கொண்டுவர முடியவில்லை. சகோதர்களே! உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, நமதுருக்கு தீயணைப்பு நிலையம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.