.

Pages

Friday, March 14, 2014

மஹல்லா நிர்வாகிகள், ம.ம.க மற்றும் முஸ்லீம் லீக் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார் T.R. பாலு !

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி தஞ்சை தொகுதியின் வேட்பாளராக திரு T.R. பாலு அவர்களை களமிறக்கி உள்ளது. இதற்காக தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கூட்டணி கட்சியினரையும், பல்வேறு முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இன்று மாலை அதிரைக்கு வருகை தந்த திரு. T.R. பாலு அவர்கள், திமுக நகர நிர்வாகிகளின் மரியாதைகளை ஏற்றுக்கொண்டதோடு கூட்டணி கட்சியான மனிதநேய கட்சியின் அலுவலகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப் இல்லம், கீழத்தெரு ஜமாத் பொருளாளர் NMS. மன்சூர் மற்றும் 'சமூக ஆர்வலர்' மான் சேக் இல்லம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், நெசவுத்தெரு சங்கம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாத், கடற்கரைதெரு ஜமாத், தரகர் தெரு ஜமாத் ஆகியவற்றிற்கு கட்சியினரோடு நேரடியாக சென்று அதன் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின் போது அந்தந்த மஹல்லா நிர்வாகிகளும், மனிதநேய கட்சி மற்றும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளும் அன்புடன் வரவேற்றனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலக சந்திப்பில்

முஸ்லீம் லீக் நிர்வாகிகள்


கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள்

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம்


நெசவுத்தெரு சங்கத்தில்
புதுத்தெரு மிஸ்கீன் பள்ளி ஜமாத்தினர் சந்திப்பின் போது
கடற்கரை தெரு ஜமாத்தினர் சந்திப்பின் போது

தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகள்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    இதே உற்சாகம் தேர்தல் முடிந்தும் இருக்க வேண்டும். அதிரையில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது, நிலத்தடி நீர் மட்டம் 110 அடிக்கு கீழ் இறங்கி விட்டது. எல்லோர் வீடுகளிலும் புதுப்புது போர் தோண்டுதல், பழைய போரை சரி செய்தல், போதாக் குறைக்கு மேலும் குழாய்களை இறக்குதல் போன்ற வேலைகள் நடந்து வருகின்றது. மேலும் நமதூர் பெரூராட்சியால் தோண்டப்பட்ட பல ஆழ்குழாய் கிணறுகளில் நீரின் ஊற்று போதுமானதாக இல்லை.

    இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? கோடை கால மழை பெய்தால் ஒழிய வேறு ஒன்றும் செய்துட முடியாது.


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete
  2. இவர் எல்லா முஹலாக்கும் சென்று கோரிக்கை என்ன வென்று கேட்டு அதனை ஏற்று கொண்டாராம் இதை போல் ஸ்ரீ பெருமபதூர் மக்களிடம் கேட்டு பார்க்கலாமே! கேஜ்ரிவால் பாணியில் உபசரிக்கப்படும், பழைய நண்பர் காங்கிரசு மனிதரை பார்க்க வில்லையா? மகளுக்கு மக்களே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.