.

Pages

Friday, March 28, 2014

அதிரையரின் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரையர் நிறுவனர்களாக செயல்படும் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் அதிரையர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் முகம்மது முகைதீன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகபர்அலி, துணை செயலாளர் நஜ்முதீன், பொருளாளர் சாகுல்அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல் லூரித் தாளாளர் நாடி முத்து கல்லூரியின் வளர்ச்சி பற்றியும், மாணவர்களுக்கு அறிவுரைகள் குறித்து பேசினார். விழாவில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் நல்ராமச்சந்திரன் பேசுகையில்,.மாணவர்களாகிய நீங்கள் படித்து விட்டு வேலை தேடி அலை யாமல் பலருக்கு வேலை வழங்கக் கூடிய தொழில் முனைவராக தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். திருச்சி சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி முதல்வர் சேகர் பேசினார். விழாவில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பருவத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி சதவிகிதம் வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பண்ணவயல் ஊராட்சித் தலைவர் ராஜாதம்பி, கல்லூரி இயக்குநர்கள் சத்தியாசுப்பிரமணியன், அசாருதீன், முகம்மதுபுகாரி, பஷீர்அகம்மது, கார்காவயல் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மின்னணுவி யல் துறைத் தலைவர் அட்சயகுமார் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.