இவற்றை கவனத்தில் எடுத்துகொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகம் சிஎம்பி வாய்க்கால் அருகே உள்ள பிரதான குழாயிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரூபாய் 2.50 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த பணிகள் இன்று முதல் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை பேரூராட்சியின் உதவி இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், செயல் அலுவலர் முனியசாமி, 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம், 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செரிப், 20 வது வார்டு உறுப்பினர் சித்ரா, ஒப்பந்ததாரர் வீரையன், பள்ளி நிர்வாகி இர்பானுதீன், சமூக ஆர்வலர் சுல்தான் நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த பகுதி மக்களின் கோரிக்கையை துரிதமாக செயல்படுத்த உதவிய அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் இக்கோரிக்கையை அப்பகுதியினரோடு சேர்ந்துகொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்த சமூக ஆர்வலர் சுல்தான் நாசர் ஆகியோர் நடைபெறும் பணிகள் குறித்து நம்மிடம் கூறுகையில்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
உன்னதமான வேலை இது, உணவு இல்லாவிட்டாலும் நீர் இல்லாமல் இருக்க முடியாது, நமது சேர்மேன் அஹ்மத் அஸ்லம் அவர்களின் இந்தச் செயல் பாராட்டப் படவேண்டியது.
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
SAM நகர் மக்களின் குடிநீர் தேவையே பூர்த்தி செய்து கொடுத்த நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete