இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹாஜி M.M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் முனைவர் கணபதி, பள்ளியின் முன்னாள் மாணவர் அல்அமீன், ஆதம் நகர் ஜமாத் துணைத்தலைவர் வாப்பு மரைக்காயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கூரில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.
முன்னதாக பள்ளியின் ஆசிரியை பள்ளி நிகழ்த்திய சாதனையை ஆண்டறிக்கையாக வாசித்தார். இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.