அதிரையின் கடற்கரையோர கிராமமாகிய எரிபுறக்கரையில் வசிக்கும் மீனவ பெண்கள் அதிகளவில் மட்டிகளை வாங்கி தினமும் காலை நேரங்களில் அதிரையில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மரக்கா அளவு வரிமட்டியை ரூபாய் 40/- க்கு விற்கின்றனர்.
இதுகுறித்து சீசன் நேரத்தில் விற்பனை செய்துவரும் ஆண்டாலு நம்மிடம் கூறுகையில்...
'வரிமட்டி எங்கள் பகுதியில் அதிகளவில் பிடிபடுகின்றன. பலவித மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக மூலச்சூட்டிற்கு ஏற்றது. வலை போட்டு இதை பிடிக்க முடியாது. சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கிதான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. வரிமட்டியின் ஓடு கிலோ 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமட்டியைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அருமையான உணவு, கால்ஷியம் அதிகம் உள்ள உணவு, இதை பல வகைகளிலும் சமைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
// மட்டியைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். //
ReplyDeleteயான் ஜமாலாக்க, நான் அப்பவே சொன்னேன் நம்ம ஏரியா பக்கம் வந்துடுங்கன்னு :)
மட்டி மூலச்சூட்டுக்கு நல்லதாம் :)