பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
செந்தில்குமரன் திருமணமண்டபத்தில் சனிக்கிழமை அன்று கிளைச்செயலாளர்கள், மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியங்கள் மற்றும் பாப்பாநாடு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல் அமர்விற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமியும், இரண்டாம் அமர்விற்கு திருவோணம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமியும், மூன்றாவது அமர்விற்கு பேராவூரணி ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான் ஆகியோர் தலைமை வகித்தனர்.
'
தஞ்சை மாவட்ட கட்சி வரலாறு' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு, ' கட்சி திட்டம்' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், 'கட்சி அமைப்பு மற்றும் செயல்பாடு' என்ற தலைப்பில் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
முகாமில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர்கள் பட்டுக்கோட்டை எம்.செல்வம், பேராவூரணி கே.சி.ஆவான், மதுக்கூர் ஆர்.காசிநாதன், திருவோணம் கே.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் வழக்கறிஞர் வி.கருப்பையா, பாப்பாநாடு மோகன்தாஸ் உள்பட நூறு பேர் கலந்து கொண்டனர்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
செந்தில்குமரன் திருமணமண்டபத்தில் சனிக்கிழமை அன்று கிளைச்செயலாளர்கள், மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியங்கள் மற்றும் பாப்பாநாடு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதல் அமர்விற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமியும், இரண்டாம் அமர்விற்கு திருவோணம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமியும், மூன்றாவது அமர்விற்கு பேராவூரணி ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான் ஆகியோர் தலைமை வகித்தனர்.
'
தஞ்சை மாவட்ட கட்சி வரலாறு' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு, ' கட்சி திட்டம்' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், 'கட்சி அமைப்பு மற்றும் செயல்பாடு' என்ற தலைப்பில் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
முகாமில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர்கள் பட்டுக்கோட்டை எம்.செல்வம், பேராவூரணி கே.சி.ஆவான், மதுக்கூர் ஆர்.காசிநாதன், திருவோணம் கே.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் வழக்கறிஞர் வி.கருப்பையா, பாப்பாநாடு மோகன்தாஸ் உள்பட நூறு பேர் கலந்து கொண்டனர்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.