.

Pages

Saturday, August 30, 2014

அதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ! முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் !!

அதிரையில் நாளை நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாளை 31-08-2014 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால், இப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிரை வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிரை காவல் துறையின் சார்பில் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள வியாபார கடைகளை அடைக்கும்படியும் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ளும்படி காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






2 comments:

  1. அதிரை காவல் துறையின் சார்பில் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ReplyDelete
  2. குறிப்பாக ஆலடிகுளத்தின் மறு கரையின் ஓரம் நம்மவர்கள் ஊர்வலம் செல்வதை வேடிக்கை பார்த்ததை சென்ற வருடம் பார்க்க நேர்ந்தது, நமக்கும்
    நம் மார்க்கத்துக்கும் ஆகாதது என்பதை ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் 100%
    தவிர்த்து விடவேண்டும். எதிர் திசையில் கூட நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.