.

Pages

Thursday, August 7, 2014

காவல்துறையை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஐனநாயக மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டையில் காவல்துறையை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
                 
பட்டுக்கோட்டையை அடுத்த குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற சேதுராணி. வேளாண் பட்டதாரியான இவருக்கு, அதே ஊரைச்சேர்ந்த பரஞ்சோதி ராமநாதன் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன் இரண்டாம் தாரமாக திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு திவ்யாவை அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சமையல் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளனர். மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்யவும் முயன்றுள்ளனர்.
           
தகவல் அறிந்து ஜனநாயக மாதர்சங்க நிர்வாகிகள் எம்.இந்துமதி, சிபிஎம் பேராவூரணி ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான் உள்ளிட்ட கட்சியினர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து, வீட்டு சிறையில் இருந்த திவ்யாவை கடந்த ஜூலை-11 அன்று மீட்டு மருத்துவ சிகிச்சையில் அனுமதித்தனர்.
                 
ஜனநாயக மாதர்சங்கம் மற்றும் கட்சி எடுத்த தொடர் நடவடிக்கையை அடுத்து, கணவர் மற்றும் மாமனார் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.தலைமறைவான மாமியார் சரஸ்வதி இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. மேலும் கடத்தி செல்லப்பட்ட திவ்யாவின் இரண்டரை வயது குழந்தையும் மீட்கப்படவில்லை.
           
'எனவே பாதிக்கப்பட்ட திவ்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளின் பிணை ரத்து செய்யப்பட்டு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்படவேண்டும். கடத்தி வைக்கப்பட்டுள்ள குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்க வேண்டும். திவ்யாவின் படிப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் குற்றவாளிகளிடம் இருந்து மீட்டு தரவேண்டும். திவ்யாவின் வரதட்சணை பொருட்கள், 40 பவுன் நகை மற்றும் ரொக்கம் 1 லட்சத்தை திரும்ப பெற்று தரவேண்டும்' என காவல்துறையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
                   
ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர்சங்க பேராவூரணி ஒன்றியச்செயலாளர் எம்.இந்துமதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் டி.அமுதா, எம்.முத்துலெட்சுமி, ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட துணைத்தலைவர் எம்.மாலதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு, பேராவூரணி ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான், பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, திருவோணம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமி, மதுக்கூர் ஒன்றியச்செயலாளர் ஆர்.காசிநாதன் உள்பட நூற்றுக்கணக்கான ஆண், பெண்கள் கலந்து கொண்டனர்.

செய்தி :
எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.