முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 2-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நேற்று முன்தினம் முகைதீன் பள்ளி திடலில் நடைபெற்றது. நகர செயலாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். அல்மஹா பெண்கள் அரபி கல்லூரி ஆசிரியை ஜெசீரா பேகம் திருகுர்ஆன் விளக்கி பேசினார். ம.ம.க தலைவர் வழக்கறிஞர் தீன்முகம்மது தொகுத்து பேசினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது வரவேற்று பேசினார். இதில் மாநில பொது செயலாளர் அப்துல் சமது, தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாவட்ட செயலாளர் நூர் தீன், முன்னால் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினார்கள்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட த.மு.மு.க மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி ஆம்புலன்ஸ் சாவியை நிர்வாகியுடன் வழங்கி பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை அர்பணித்து வைத்து பேசுகையில்:
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது உரிமைகளை பெற நீங்கள் நிலையை மாற்றி கொள்ள வேண்டும். முத்துப்பேட்டையில் இங்குள்ள முஸ்லிம்களுக்கு போராட்டம் நடத்த முதன்முதலில் நான்தான் கற்றுக் கொடுத்தேன். ஆனால் அன்றைய நாள் முதல் இன்று வரை அதே நிலையில்தான் உள்ளது என்று பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அன்றைக்கு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த அதே நிலையில் தான் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனை உள்ளது. இதற்காக நமது இயக்கத்தினர் போராட வேண்டும். இந்தியாவை தூக்கி நிலை நிறுத்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடியின் செயல்பாடு இன்றைக்கு வெரும் வித்தையாகி விட்டது. இதனை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் த.மு.மு.க சார்பில் 120 ஆம்புலன்ஸ் இது வரை அர்ப்பணித்துள்ளோம். இதில் ஜாதி, மதம், பார்ப்பது கிடையாது. ராஜபக்சேவிடம் நான் தான் கூறி தமிழக மீனவர்களையும,; படகுகளையும் பிடிக்க சொன்னேன் என்று சுப்பிரமணிய சாமி வெட்டவெளிச்சமாக கூறினார். ஏன் அவர்களை தமிழக மக்கள் இன்னும் விட்டு வைத்துள்ளனர். இவ்வாறு ஹைதர் அலி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் குத்புதீன். மாவட்ட பொருளாளர் பஜ்லுல் ஹக், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகபர் சாதிக், மாணவர் அணி மாவட்ட செயலாளர் பைசல், துணைச் செயலாளர் நியாஸ் அகம்மது, ஆசாத்நகர் ஜாமத் தலைவர் ஜின்னா, முகைதீன் பள்ளி ஜமாத் தலைவர் முகமது ராவுத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட த.மு.மு.க மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி ஆம்புலன்ஸ் சாவியை நிர்வாகியுடன் வழங்கி பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை அர்பணித்து வைத்து பேசுகையில்:
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது உரிமைகளை பெற நீங்கள் நிலையை மாற்றி கொள்ள வேண்டும். முத்துப்பேட்டையில் இங்குள்ள முஸ்லிம்களுக்கு போராட்டம் நடத்த முதன்முதலில் நான்தான் கற்றுக் கொடுத்தேன். ஆனால் அன்றைய நாள் முதல் இன்று வரை அதே நிலையில்தான் உள்ளது என்று பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அன்றைக்கு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த அதே நிலையில் தான் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனை உள்ளது. இதற்காக நமது இயக்கத்தினர் போராட வேண்டும். இந்தியாவை தூக்கி நிலை நிறுத்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடியின் செயல்பாடு இன்றைக்கு வெரும் வித்தையாகி விட்டது. இதனை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் த.மு.மு.க சார்பில் 120 ஆம்புலன்ஸ் இது வரை அர்ப்பணித்துள்ளோம். இதில் ஜாதி, மதம், பார்ப்பது கிடையாது. ராஜபக்சேவிடம் நான் தான் கூறி தமிழக மீனவர்களையும,; படகுகளையும் பிடிக்க சொன்னேன் என்று சுப்பிரமணிய சாமி வெட்டவெளிச்சமாக கூறினார். ஏன் அவர்களை தமிழக மக்கள் இன்னும் விட்டு வைத்துள்ளனர். இவ்வாறு ஹைதர் அலி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் குத்புதீன். மாவட்ட பொருளாளர் பஜ்லுல் ஹக், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகபர் சாதிக், மாணவர் அணி மாவட்ட செயலாளர் பைசல், துணைச் செயலாளர் நியாஸ் அகம்மது, ஆசாத்நகர் ஜாமத் தலைவர் ஜின்னா, முகைதீன் பள்ளி ஜமாத் தலைவர் முகமது ராவுத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.