.

Pages

Monday, March 23, 2015

அதிரையில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்றாக இருந்தது. அதிரையில் பத்திர பதிவு அலுவலகம் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள கட்டிடத்தில்தான் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசின் சார்பில் மாதந்தோறும் வாடகை தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

அரசின் அறிவிப்பை அடுத்து பத்திர பதிவு அலுவலகம் அமைப்பதற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடம் தேர்வு நடைபெற்று வந்தது. இறுதியில் நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்கள் தமக்கு சொந்தமாக உள்ள [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். தானமாக வழங்கிய இடத்தை அரசின் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்தார். இதையடுத்து அரசு சார்பில் கட்டுமானப் பணிக்காக  ₹ 1.05 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டது.  முதற்கட்டமாக  ₹ 55 லட்சம் மதிப்பிட்டில் கட்டிடம் கட்டுவதற்குரிய ஆரம்ப கட்ட பணி கடந்த [ 12-02-2014 ] அன்று துவங்கியது.

இந்நிலையில் கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்பு விழா காணப்பட இருக்கிறது. மாநில அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் இதற்கான திறப்பு விழா நடைபெற இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

புதுப்பொலிவுடன் கம்பிரமாக காட்சியளிக்கும் அதிரை பத்திர பதிவு அலுவலகத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசர்களுக்காக வழங்குகிறோம்...
 
 
 
 
 
 
 
 

3 comments:

  1. அருமையான கட்டிடம். இங்கே வரும் சில நபர்கள் வெத்தலையை போட்டு மூலைக்கு மூலை அசுத்தம் படுத்தாமல் எச்சரிக்கை பலகை வைத்து பாதுகாக்கவும்.

    ReplyDelete
  2. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களிலும் ஏன் 1858 ல் கட்டியகட்டிடங்களில் விழும் தருவாயில் இன்னமும் இயங்கி பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது. சகல வசதிகள் கூடிய பத்திர அலுவலகம் நம்மவூரில் அமைய காரணமாக இருந்தவர்களை பாராட்டுவதோடு தாராள மனத்தோடு நிலத்தை வழங்கிய வள்ளலை பொது மக்கள் பாராட்ட வேண்டும்.

    பதிவுகட்டனத்தை DD அல்லது Online Payment முறையிருந்தாலும் கட்டாயமாக லஞ்சத்தை அதிகாரிகள் கேட்டு வாங்குவதேன்? புது இடம், அலுவலகம் ஆனால் அதே தவறு செய்யும் அதிகாரிகள்?, பெண்களுக்கு குடிக்க தண்ணீர், கழிப்பறை இல்லாத குறையிருந்தாலும் லஞ்சத்தை தவிர்க்க என்ன வழி? நடவடிக்கை தேவை.

    ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்களுக்கு துஆவும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. எனது அருமை நண்பன் ஜஹபர் அலி மற்றும் ஆலடி தெரு பினா முன குடும்பத்தாரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது ..இந்த அலுவலகம் ஊரின் மத்திய பகுதியான யானையன் குளத்தில் வரவேண்டும் என்று நான் தமிழக அரசிடம் பரிந்துரைத்து இருந்தேன் .

    இருப்பினும் இறைவனின் நாட்டம் அதுவே நடந்தேறும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.