.

Pages

Sunday, March 15, 2015

துபாயில் காமிராவை முதுகில் கட்டிக்கொண்டு சாதனை படைத்த கழுகு !

முதுகில் காமிராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கழுகுகளை பாதுகாப்பது குறித்து Freedom Conservation அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ் என்பவர் ஆண்டுதோறும் கழுகுகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

2015 ஆம் ஆண்டு துபாய் நகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்ட அவர், தர்ஷன் என்ற பெயருடைய கழுகுடன் நேற்று களத்தில் இறங்கியுள்ளார்.

கழுகின் முதுகில் காமிராவை கட்டிய அவர், உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான பூரிஜ் கலிஃபா உள்ள பகுதிக்கு வந்துள்ளார். 829.8 மீட்டர் உயரமுள்ள அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அமருமாரு கட்டளையிட்டதுடன், அந்த கழுகு பூரிஜ் கட்டிட உச்சியில் சென்று அமர்கிறது. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிய கழுகு, வானலாவிய கட்டிடங்கள் துல்லியமாக தெரியுமளவில் துபாய் நகரம் முழுவதும் அந்த கழுகு சுற்றி வருகிறது. இடையிடையே கழுகின் உரிமையாளர் கீழிருந்து சில சமிக்ஞைகளை காட்டியவாறு உள்ளார்.

கழுகுவின் இந்த பயணம் மூலம், பூரிஜ் கட்டிடம் முதல் பல உயரமான கட்டிடங்களை இதுவரை பார்த்திராத புது கோணத்தில் பார்க்க முடிகிறது.

துபாய் நகரம் முழுவதும் வலம் வந்த அந்த கழுகிற்கு, அதன் உரிமையாளர் ஒரு சமிக்ஞையை காட்டியவுடன், கழுகு தனது இறக்கைகளை மடித்து செங்குத்தாக தனது முதலாளியை நோக்கி கிழே பறந்து வந்து அவரது கையில் அமர்கிறது.

இந்த பிரமிப்பான காட்சியை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஆரவாரமாக கை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். பிரமிப்பான பயணம் மூலம் உலக சாதனை படைத்துள்ள கழுகு குறித்து பேசிய ஜாக்கூஷ், ஆபத்தான பறவைகளில் ஒன்றாக கருதப்படும் கழுகு மற்றும் பிற பறவைகளின் இயற்கை பண்புகளையும் அவற்றின் பயன்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.