.

Pages

Saturday, March 21, 2015

பேருந்து நிலைய சிமெண்ட் தளம் அமைக்கும் இறுதி கட்ட பணி தாமதம் !

முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நகரை ஒட்டிய தூரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்ததால் பல ஆண்டுகளாக பேருந்துகள் செல்லாமல் செயல் படாமல் கிடந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பேரூராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலையத்தை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு என்ற பேரில் பல லட்சம் ரூபாய்களை வீணாக்கி வந்தனர். ஆனால் பேருந்து நிலையம் செயல்பட எந்த வித தொலைநோக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் கூடிக்கொண்டே சென்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை காவல் துறையின் தீவிர முயற்சியால் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பேருந்து நிலையத்துக்குள் சிமிண்ட் தளம் அமைப்பதற்காக கடந்த ஆண்டு ரூபாய் 60 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு பணி துவக்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடந்த அந்த பணி தற்பொழுது 90 சதவீதம் முடிந்த நிலையில் மெயின் சாலையிலிருந்து சிமிண்ட் தளத்தை இணைக்கும் சிறு பாலம் கட்டும் பணிகள் உட்பட சுமார் 10 சதவீதப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த திட்டம் முழுமை பெற்று நிறைவு பெறாமல் பேருந்துநிலையம் இதுநாள் வரை செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் பழைய பேருந்து நிலையத்தில் அக்கிரமிப்பால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகள், பிரச்சனைகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் தீர்வாக இந்த புதிய பேருந்து நிலையம் செயல்பட்டால் முத்துப்பேட்டை பொதுமக்களுக்கும் நகரின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பேரூராட்சி நிர்வாகம் புதிய பேருந்து நிலையத்தில் கிடப்பில் உள்ள 10 சதவீதப்பணியை துரிதப்படுத்தி பணியை முடித்து புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். என்று முத்துப்பேட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.