இந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்களை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
புதிய கண்டுபிடிப்பு குறித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'பழுதடைந்த லேப்டப் பேட்டரிகளின் செல்களை தனியாக பிரித்து அதில் எந்த செல்களை மீண்டும் இயங்க வைக்க முடியும் என்பதை கண்டறிந்து அவற்றை ஒன்றினைத்து இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை இன்வேர்ட்டர் பயன்படுத்தி வோல்டேஜ் பவரை அதிகப்படுத்துகிறோம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயங்க வைக்கிறோம். சுமார் 3 மணி நேரம் வரை இயங்க வைக்க முடியும்' என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் நம்மிடம் கூறுகையில்..
'பயன்தர தகுதியற்றவை என தூக்கி வீசக்கூடிய ஒரு பொருளின் மூலம் ஏன் பயனை பெறமுடியாது ? என்பதை நிருபித்துள்ளனர். மாணவர்களின் புதிய முயற்சிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்கள் பலர் புதிய தேடல் முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்வை தருகிறது' என்றார்.
My dear student, your are wonderful, very niceful, but you should keep this with international level. I would like to say one think that, you should hard work then only you will be reached international level. now you understand what I say?
ReplyDelete