.

Pages

Tuesday, March 31, 2015

ராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு !

அதிரை அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பி. ஈஸ்வர மூர்த்தி, கே. சதிஸ்குமார், பி. மணிகண்டன் ஆகியோர் பழுதடைந்த லேப்டப் பேட்டரிகளை கொண்டு எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயக்கலாம் என்பதை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்களை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

புதிய கண்டுபிடிப்பு குறித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'பழுதடைந்த லேப்டப் பேட்டரிகளின் செல்களை தனியாக பிரித்து அதில் எந்த செல்களை மீண்டும் இயங்க வைக்க முடியும் என்பதை கண்டறிந்து அவற்றை ஒன்றினைத்து இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை இன்வேர்ட்டர் பயன்படுத்தி வோல்டேஜ் பவரை அதிகப்படுத்துகிறோம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயங்க வைக்கிறோம். சுமார் 3 மணி நேரம் வரை இயங்க வைக்க முடியும்' என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் நம்மிடம் கூறுகையில்..
'பயன்தர தகுதியற்றவை என தூக்கி வீசக்கூடிய ஒரு பொருளின் மூலம் ஏன் பயனை பெறமுடியாது ? என்பதை நிருபித்துள்ளனர். மாணவர்களின் புதிய முயற்சிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்கள் பலர் புதிய தேடல் முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்வை தருகிறது' என்றார்.
 
 
 
 

1 comment:

  1. My dear student, your are wonderful, very niceful, but you should keep this with international level. I would like to say one think that, you should hard work then only you will be reached international level. now you understand what I say?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.