இந்நிலையில் அதிரை சேதுரோட்டில் இயங்கி வந்த அவிசோ காப்பகம் மூடப்பட்டதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பாக அவிசோ காப்பக நிர்வாகிகள் நம்மை தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் சேதுரோடு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஏரிபுறக்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கட்டிட பணிகள் நிறைவுபெற்றவுடன் காப்பகம் விரைவாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டிட பணிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கண்தானம் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கிறது. நவீன தொழில்நுட்ப மருத்துவம், பயிற்சி மூலம் காதுகேட்கவும், செய்கை மொழியால் பேசவும் முடியும்.ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், சரிசெய்ய வாய்ப்பில்லை. மருத்துவ வளர்ச்சி அதிகரித்தாலும், போதுமான விழிப்புணர்வு இன்மையால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு குறையவில்லை.எய்ட்ஸ் தடுப்புக்கு கொடுக்கும் விழிப்புணர்வில், ஒரு சதவீதம் கூட, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பை தடுப்பதற்கு, கொடுக்கப்படுவதில்லை என்பதை நினைக்கும்போது, வருத்தம் தான் ஏற்படுகிறது.
ReplyDeleteகொஞ்சம் மனவளாச்சி குன்றிய குழந்தைகளை நம்வூர் தனியார் பள்ளியில் admission இல்லை அவர்களின் பெற்றோர் படும் பாடு சொல்லிமாளாது. மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்பநிலை பயிற்சி அளித்து, அதற்குபின், நல்லநிலையில் உள்ள குழந்தைகளுடன் கல்வி பயிலும் அளவுக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தயார்படுத்துவது அரசின் திட்டம் அறிவித்தது, அறிவிப்போடு சரி.
ராமகிருஷ்ணா மடத்தில் தொழுநோயாளிகளை எவ்வளவு அன்பாக கவனிக்கிறார்கள் அதன் நிர்வாகத்தை பற்றி பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கும் பலர் இம்மாதிரியான குழந்தைகளை வைத்து வியாபாரம் பண்ணுவதை பரவலாக தமிழகத்தில் பார்க்க முடிகிறது.
அவிசோவில் நிறைகள் குறைகள் இருக்கலாம் நல்ல மனதோடு குழந்தைகளை கவனித்தால் இறைவன் நற்கூலி தருவான். ரிஜ்க் கொடுப்பதும் - எடுப்பதும் அவனே!!