அதிரை பேரூராட்சியின் சார்பில் கடந்த 2013 ஆண்டு முதல் அதிரையின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு நாள் விட்டு மறுநாள் குடிநீர் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்போது வறட்சியையும், மின்சார பற்றாக்குறையும் காரணமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் அதிரையின் குளங்களுக்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக தமிழக அரசு வழங்கிய தண்ணீரால் அதிரையின் நீர் மட்டத்தின் அளவு சற்று உயர்ந்துள்ளது. தமிழக அரசு அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் தடையில்லா மின்சாரமும் வழங்கி வருகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிரை பேரூராட்சி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மிலாரிக்காடு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக போர்வெல் அமைத்துள்ளது. இதனால் தண்ணீர் போதுமான அளவு பெற இயலும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அதிரை பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீரை ஒருநாள் விட்டு மறுநாள் வழங்குவதை நிறுத்திவிட்டு தினமும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் அதிரையின் குளங்களுக்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக தமிழக அரசு வழங்கிய தண்ணீரால் அதிரையின் நீர் மட்டத்தின் அளவு சற்று உயர்ந்துள்ளது. தமிழக அரசு அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் தடையில்லா மின்சாரமும் வழங்கி வருகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிரை பேரூராட்சி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மிலாரிக்காடு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக போர்வெல் அமைத்துள்ளது. இதனால் தண்ணீர் போதுமான அளவு பெற இயலும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அதிரை பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீரை ஒருநாள் விட்டு மறுநாள் வழங்குவதை நிறுத்திவிட்டு தினமும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.