ஈராக்கை சேர்ந்த நபர் ஒருவர் 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்வது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈராக்கை சேர்ந்த அலி சதாம் என்ற நபர், அந்நாட்டிலேயே 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார்.
இவர் காலை உணவாக 24 முட்டைகள், மதிய உணவாக 2 முழு கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகள், இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லிட்டர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளை சாப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் அலியால் உணவை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளார். மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள, கடந்த மார்ச் 16 ம் தேதி அங்குள்ள பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.
சமீபத்தில் இந்த சிகிச்சையை, இரண்டு மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல் பேசுகையில், சிகிச்சை முடிந்த 5 நாட்களில், அலியின் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.
இது தொடர்பாக அலி கூறுகையில், அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன். தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் நான் ஒரு சராசரி மனிதரை போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
ஈராக்கை சேர்ந்த அலி சதாம் என்ற நபர், அந்நாட்டிலேயே 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார்.
இவர் காலை உணவாக 24 முட்டைகள், மதிய உணவாக 2 முழு கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகள், இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லிட்டர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளை சாப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் அலியால் உணவை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளார். மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள, கடந்த மார்ச் 16 ம் தேதி அங்குள்ள பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.
சமீபத்தில் இந்த சிகிச்சையை, இரண்டு மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல் பேசுகையில், சிகிச்சை முடிந்த 5 நாட்களில், அலியின் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.
இது தொடர்பாக அலி கூறுகையில், அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன். தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் நான் ஒரு சராசரி மனிதரை போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.