.

Pages

Sunday, March 29, 2015

பட்டுக்கோட்டையில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் !

பட்டுக்கோட்டை குரும்பகுளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திரு எஸ். ஜவஹர் பாபு, நகராட்சி ஆணையர் கே. அச்சையா, 17 வது வார்டு உறுப்பினர் லதா பாஸ்கர், 18 வது வார்டு உறுப்பினர் மாஸ்கோ, 19 வது வார்டு உறுப்பினர் கே நாடிமுத்து, ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தொழு நோயின் அறிகுறிகள் சிவந்த வெளிர்ந்த வலியில்லாத தேமல்கள் மற்றும் கை கால் பலவீனம், மதமதப்பு போன்றவை இருப்பின் அரசு வழங்கும் இலவச மருந்துகளை தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்' என துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் விளக்கி பேசினார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்தார். 3 புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை 17 வது வார்டு உறுப்பினர் லதா பாஸ்கர், 18 வது வார்டு உறுப்பினர் மாஸ்கோ, 19 வது வார்டு உறுப்பினர் கே நாடிமுத்து, ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் , பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நலகல்வியாளர் ராஜரெத்தினம் மற்றும் துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.