.

Pages

Monday, March 16, 2015

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் மனிதநேயம் !

அதிரை தொக்காலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 39). இவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவருக்கு B+ இரத்தம் 3 யூனிட் உடனடியாக தேவை என்று தகவல் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்களுக்கு வந்ததுள்ளது. இதையடுத்து தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். மறுபுறம் கல்லூரி மாணவர் அப்துல் ரஹ்மான் முயற்சியில் ஈடுபட, அடுத்த சில நிமிட ஏற்பாடுகளில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் அஹமது நபீல், இம்ரான், அண்ணா யுனிவர்சிட்டி மாணவர் ரசீத் ஆகியோர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்களின் இல்லம் தேடிச்சென்றனர். இதையடுத்து தஞ்சை சென்று, இரத்தம் தானம் செய்து விட்டு நலமுடன் ஊர் திரும்பினர். இவர்களின் மனித நேய பணியை நோயாளியின் உறவினர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

நடப்பாண்டில் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் மூலம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 64 யூனிட் இரத்தம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேராசிரியர் செய்யது அஹமது கபீர் கூறுகையில்...
'அழைத்த மறுநிமிடமே இரத்தம் தானம் செய்ய முன்வந்த எங்கள் கல்லூரி மாணவர்கள் அஹமது நபீல், இம்ரான், அண்ணா யுனிவர்சிட்டி மாணவர் ரசீத் ஆகியோருக்கும், உரிய நேரத்தில் தகவல் தந்த எங்கள் கல்லூரி பேராசிரியர் வீரபாண்டியன் சார் அவர்களுக்கும் நன்றி. திரு.சுந்தர்ராஜன் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்' என்றார்.
 இரத்தம் வழங்கிய கல்லூரி மாணவர் நபீல்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.